செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 46 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்

Published On 2020-09-16 18:03 GMT   |   Update On 2020-09-16 18:03 GMT
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 633 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 652 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 633 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 768 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 559 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 189
செங்கல்பட்டு - 2,215
சென்னை - 9,833
கோவை - 3,437
கடலூர் - 2,415
தர்மபுரி - 877
திண்டுக்கல் - 672
ஈரோடு - 1,022
கள்ளக்குறிச்சி - 1,132
காஞ்சிபுரம் - 1,332
கன்னியாகுமரி - 844
கரூர் - 428
கிருஷ்ணகிரி - 847 
மதுரை - 799
நாகை - 1,077
நாமக்கல் - 922
நீலகிரி - 623
பெரம்பலூர் - 109
புதுக்கோட்டை - 828
ராமநாதபுரம் - 276
ராணிப்பேட்டை - 596
சேலம் - 2,220
சிவகங்கை - 243
தென்காசி - 545
தஞ்சாவூர் - 964
தேனி - 705
திருப்பத்தூர் - 615
திருவள்ளூர் - 2,055
திருவண்ணாமலை - 1,381
திருவாரூர் - 746
தூத்துக்குடி - 764
திருநெல்வேலி - 1,054
திருப்பூர் - 1,637
திருச்சி - 867
வேலூர் - 1,080
விழுப்புரம் - 872
விருதுநகர் - 368
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 5
உள்நாடு - 37
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

மொத்தம் - 46,633

Tags:    

Similar News