உள்ளூர் செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் முதன் முதலில் கடந்த 2020 வருடம் மார்ச் 22-ந் தேதி தாய்லாந்து நாட்டில் இருந்து வந்திருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அவர்கள் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வந்தது. இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 2-ம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத் தியது. தினசரி பாதிப்பு அதிக பட்சமாக 1,764 வரை பதிவாகியது. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது.
முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் சிலர் சிகிச்சை பலனின்றி இறந் தனர். இதன் பின் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக் கைகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக 2&ம் அலை கட்டுக்குள் வரத் தொடங்கியது.
இதனால் மாவட்டத்தில் பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக மாவட்டத்தில் 3-ம் அலை உருவாக்கி ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டதால் 3&ம் அலையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அவர்களுக்கு லேசான அறிகுறியே இருந்ததால் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று குணமடைந்தார். 3-ம் அலையில் தினசரி பாதிப்பு 1,400 வரை பதிவாகி இருந்தது.
பின்னர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்ததன் காரணமாக 3-ம் அலை பாதிப்பு குறைய தொடங் கியது. இந்நிலையில் மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி ஒற்றை இலக்கில் பதிவாகி வந்தது.
கடந்த 2-ந் தேதி கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பினார்.
இதனால் சுமார் 2 வருடங்களுக்கு பிறகு கொரோனா இல்லாத மாவட்டமானது ஈரோடு. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
இந்நிலையில் கிட்டத்தட்ட 15 நாட்களுக்குப் பிறகு நேற்று ஈரோட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 933 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 734 பேர் இறந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.