மதுரை அருகே விபத்து: கல்லூரி மாணவர் பலி
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் சுபாஷ் (வயது 20). இவர் திருமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்., இறுதி ஆண்டு படித்து வந்தார்.
வீட்டில் இருந்த சுபாஷ், இன்று மதியம் சமயநல்லூர் கட்டப்புலி நகரில் உள்ள பாட்டி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அலங்காநல்லூர்-சோழ வந்தான் ரோட்டில் உள்ள ஆனைக்குளம் கண்மாய் பகுதியில் வந்து கொண் டிருந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோர புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சுபாஷ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த சோழவந்தான் போலீஸ் இன்ஸ் பெக்டர் பாலாஜி, சப்- இன்ஸ்பெக்டர் சிவாஜி ஆகியோர் அங்கு வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.