உள்ளூர் செய்திகள்
விளாத்திகுளம் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய பெண் கைது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகையை திருடியது தொடர்பாக பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே பூசனூரைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி குருலட்சுமி. இவர்கள் இருவரும் கடந்த 18-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். மாலையில் வீடு திரும்பிய போது, பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சமாகும். இதுகுறித்து குருலட்சுமி அளித்த புகாரின் பேரில் குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆனந்த தாண்டவம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில், பூசனூரைச் சேர்ந்த மாரீஸ்வரன் மனைவி முருகேஸ்வரி (24) என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், மாடசாமியும், குருலட்சுமியும் தினமும் வேலைக்கு செல்லும் போது வீட்டை பூட்டி சாவியை வைக்கும் இடத்தை முருகேஸ்வரி அறிந்து கொண்டு, கடந்த 18-ந் தேதி அவர்கள் இருவரும் வேலைக்கு சென்ற பின்னர், சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் சென்று, பீரோவில் இருந்த நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து முருகேஸ்வரியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 9½ பவுன் நகைகளை மீட்டனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.
விளாத்திகுளம் அருகே பூசனூரைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி குருலட்சுமி. இவர்கள் இருவரும் கடந்த 18-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். மாலையில் வீடு திரும்பிய போது, பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சமாகும். இதுகுறித்து குருலட்சுமி அளித்த புகாரின் பேரில் குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆனந்த தாண்டவம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில், பூசனூரைச் சேர்ந்த மாரீஸ்வரன் மனைவி முருகேஸ்வரி (24) என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், மாடசாமியும், குருலட்சுமியும் தினமும் வேலைக்கு செல்லும் போது வீட்டை பூட்டி சாவியை வைக்கும் இடத்தை முருகேஸ்வரி அறிந்து கொண்டு, கடந்த 18-ந் தேதி அவர்கள் இருவரும் வேலைக்கு சென்ற பின்னர், சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் சென்று, பீரோவில் இருந்த நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து முருகேஸ்வரியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 9½ பவுன் நகைகளை மீட்டனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.