செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம்

Published On 2021-03-02 08:10 GMT   |   Update On 2021-03-02 08:10 GMT
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5-ந்தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும்.  6-ந்தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News