செய்திகள்
கொரோனா வைரஸ்

மகாராஷ்டிராவில் மேலும் 195 போலீசாருக்கு கொரோனா தொற்று

Published On 2020-10-08 09:38 GMT   |   Update On 2020-10-08 09:38 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 195 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்புடன் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்குகிறது. 

கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் நின்று பணியாற்றும் துறைகளில் ஒன்றான காவல்துறையைச் சேர்ந்தவர்களும் தப்பவில்லை. 

இந்நிலையில், அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 581 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை 256 போலீசார் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 2 ஆயிரத்து 462 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து 21 ஆயிரத்து 862 போலீசார் குணம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News