செய்திகள்
விபத்து

காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தனியார் கம்பெனி காவலாளி பலி

Published On 2019-07-26 16:40 GMT   |   Update On 2019-07-26 16:40 GMT
காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் கம்பெனி காவலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள தெள்ளனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது55). தனியார் ஜல்லி கிரசர் குவாரியில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று மாலை தனது தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் மகளை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றார். அப்போது காரிமங்கலம் அடுத்துள்ள திண்டல் பிரிவு சாலை அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் நேருக்குநேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மனோகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். 

காயம் அடைந்த  அவரது மகளை அக்கம்பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ  இடத்திற்கு வந்து மனோகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News