உள்ளூர் செய்திகள்
திண்டிவனத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
திண்டிவனத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
திண்டிவனம் பகுதியில் உள்ள சில கிடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மரக்காணம் சாலை மற்றும் ரோஷணை சரவண பிள்ளை கோவில் தெருவில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இது தொடர்பாக திண்டிவனம் ஆர்.எஸ்.பிள்ளை தெருவை சேர்ந்த ராஜகோபால் மகன் நாகராஜ்(வயது 45), ரோஷணை சரவண பிள்ளை கோவில் தெருவை சேர்ந்த சண்முகம்(52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கடைகளில் இருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.