செய்திகள்
கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பி பாளையம் அமராவதி ஆற்று படித்துறையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட வேலுச்சாமி (வயது 63) உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.