உள்ளூர் செய்திகள்
தேரிமேல்விளை சிவன் கோவிலில் கலையரங்கம் அமைக்கும் பணியை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
தேரிமேல்விளை சிவன் கோவிலில் கலையரங்கம் அமைக்கும் பணியை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
நாகர்கோவில், மே.7-
ராஜாக்கமங்கலம் ஒன்றியம் தர்மபுரம் ஊராட்சி தேரிமேல்விளையில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் கலை யரங்கம் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து கன்னியா குமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தளவாய்சுந்தரம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அத்துடன் அவர் கலையரங் கம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பச்சைமால் கலந்து கொண்டார்.