செய்திகள்
ஜிகே மணி

நாளை நடைபெற இருந்த பாமக சிறப்பு பொதுக்குழு 25-ந் தேதிக்கு மாற்றம்- ஜிகே மணி அறிவிப்பு

Published On 2021-02-21 05:04 GMT   |   Update On 2021-02-21 05:04 GMT
பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டு வரும் 25-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என்று ஜிகே மணி தெரிவித்துள்ளார்.

சென்னை:

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சட்டப் பேரவை தேர்தல் ஏற்பாடுகள், வாக்குச் சாவடிகள் நிலையிலான களப்பணிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை (22-ந் தேதி) பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்ழு கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தவிர்க்க முடியாத காரணத்தால் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டு வரும் 25-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News