உள்ளூர் செய்திகள்
நிலக்கோட்டை அருகே வைகையாற்றில் மூழ்கி பள்ளி ஆசிரியர் பலியானார்
நிலக்கோட்டை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆனந்தநகரை சேர்ந்தவர் வீரசிவா (வயது36). இவர் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி தனது நண்பர்கள் 4 பேருடன் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்தார்.
அப்போது அணைப்பட்டி வைகையாற்றில் இறங்கி குளித்தனர். திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற வீரசிவா நீரில் மூழ்கி தத்தளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர்.
இது குறித்து நிலக்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்குள் வீரசிவா நீரில் மூழ்கி பலியானார். அவரது உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆனந்தநகரை சேர்ந்தவர் வீரசிவா (வயது36). இவர் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி தனது நண்பர்கள் 4 பேருடன் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்தார்.
அப்போது அணைப்பட்டி வைகையாற்றில் இறங்கி குளித்தனர். திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற வீரசிவா நீரில் மூழ்கி தத்தளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர்.
இது குறித்து நிலக்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்குள் வீரசிவா நீரில் மூழ்கி பலியானார். அவரது உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.