செய்திகள்
மாயம்

வெளிநாட்டில் இருந்து திரும்பிய வாலிபர் மாயம்

Published On 2021-10-08 10:08 GMT   |   Update On 2021-10-08 10:08 GMT
வெளிநாட்டில் இருந்து திரும்பிய வாலிபர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

டவுன் ஆசாத் நகரை சேர்ந்தவர் ஹனீபா ராஜா (வயது 31). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஊர் திரும்பினார்.

இந்நிலையில் கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஹனீபா ராஜா காணவில்லை என அவரது மனைவி செய்யதலி பாத்திமா போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News