செய்திகள்
வெளிநாட்டில் இருந்து திரும்பிய வாலிபர் மாயம்
வெளிநாட்டில் இருந்து திரும்பிய வாலிபர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
டவுன் ஆசாத் நகரை சேர்ந்தவர் ஹனீபா ராஜா (வயது 31). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஊர் திரும்பினார்.
இந்நிலையில் கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஹனீபா ராஜா காணவில்லை என அவரது மனைவி செய்யதலி பாத்திமா போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.