ஆன்மிகம்
முத்தாரம்மன்

மேலசங்கரன்குழி முத்தாரம்மன் கோவில் கொடைவிழா இன்று தொடங்குகிறது

Published On 2020-12-22 05:31 GMT   |   Update On 2020-12-22 05:31 GMT
மேலசங்கரன்குழி முத்தாரம்மன் கோவில் கொடை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
மேலசங்கரன்குழி முத்தாரம்மன் கோவில் கொடை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது இன்று அதிகாலை 5 மணிக்கு பூஜை, காலை் 11.30 மணிக்கு தீபாதாரனை, 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, இரவு 9 மணிக்கு வில்லிசை, 12 மணிக்கு தீபாராதனை, நாளை(புதன்கிழமை) காலை 9 மணிக்கு வில்லிசை, பகல் 11 மணிக்கு சுருள் அழைப்பு, மதியம் 1 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, பிற்பகல் 3 மணிக்கு அம்மன் பவனி வருதல், இரவு 7 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12-30 மணிக்கு தீபாராதனை, 24-ந்தேதி மாலை 6 மணிக்கு சமய வகுப்பு மாணவ- மாணவியரின் கலை நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு தீபாராதனை, 7.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, சமய வகுப்பு மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் ஆகியவை நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News