செய்திகள்
கைது

ராஜகிரியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

Published On 2021-10-19 18:18 GMT   |   Update On 2021-10-19 18:18 GMT
ராஜகிரியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாபநாசம்:

பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன், ஏட்டு கலைச்செல்வன் ஆகியோர் பாபநாசம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ராஜகிரி மெயின் ரோட்டில் செயல்பாட்டில் இல்லாத ஒரு தனியார் மருத்துவமனை வளாகத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ராஜகிரியை சேர்ந்த முகமது ஆசிக் (வயது 19), பண்டாரவாடையை சேர்ந்த முகமது சாகின் (18) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 19 கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் இருவரையும் பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் சிவகுமார் 2 வாலிபர்களையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News