ஆன்மிகம்
கள்ளழகர் கோவிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி
அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவில், பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவிலிலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை கண்டறியபட்டு, கிருமி நாசினி மருந்துகள் கைகளில் பயன்படுத்தியும், முகக் கவசம் அணிந்த நிலையில் பக்தர்கள் வரிசையாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நேற்று பங்குனி மாத பரிபூர்ண சர்வ அமாவாசையையொட்டி நூபுர கங்கையில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக சென்று புனித தீர்த்தமாடினர். பின்னர் அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர். முருகப் பெருமானின் 6-வது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, தீர்த்தம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. இங்கும் பக்தர்கள் முக கவசம் அணிந்து வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்து நெய் விளக்கேற்றினர்.
அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவில், பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவிலிலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை கண்டறியபட்டு, கிருமி நாசினி மருந்துகள் கைகளில் பயன்படுத்தியும், முகக் கவசம் அணிந்த நிலையில் பக்தர்கள் வரிசையாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள் செய்திருந்தனர்.
அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவில், பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவிலிலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை கண்டறியபட்டு, கிருமி நாசினி மருந்துகள் கைகளில் பயன்படுத்தியும், முகக் கவசம் அணிந்த நிலையில் பக்தர்கள் வரிசையாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள் செய்திருந்தனர்.