செய்திகள்
கள்ளக்காதலியின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டல் - ஒர்க்ஷாப் உரிமையாளர் கைது
உல்லாசத்துக்கு வர மறுத்த கள்ளக்காதலியின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டல் விடுத்த ஒர்க்ஷாப் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
போத்தனூர்:
கோவையை சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. அந்த பெண் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிட்கோவில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஒர்க்ஷாப் உரிமையாளரான மலுமிச்சம்பட்டி ஸ்ரீகுருநகரை சேர்ந்த சந்திரனுடன் (வயது 40) பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி வெளியே சென்று அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர், அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது செல்போனில் எடுத்து வைத்ததாக தெரி கிறது. இந்தநிலையில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக சந்திரனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட் டது. இதனால் அந்த பெண் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்றார். பின்னர் அவர் சந்திரனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். ஆனாலும் சந்திரன் செல்போன் மூலமாக அவரை தொடர்புகொண்டு உல்லாசத்துக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
அதற்கு அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரன், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று நீ என்னுடன் உல்லாசத்துக்கு வர மறுத்தால் இருவரும் ஒன்றாக இருந்த போது எடுத்த ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி உள்ளார். இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் சந்திரன் மீது வழக்குபதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.