செய்திகள்
தற்கொலை

ஆதம்பாக்கத்தில் என்ஜினீயர் தற்கொலை

Published On 2020-11-24 03:05 GMT   |   Update On 2020-11-24 03:05 GMT
ஆதம்பாக்கத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆலந்தூர்:

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் நியூகாலனி 8-வது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் சாய் அரவிந்த் (வயது 23). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கால் தற்போது வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தார்.

நேற்று மாலை திடீரென தனது வீட்டில் சாய் அரவிந்த், தூக்கில் தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சாய் அரவிந்த் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சாய் அரவிந்த் ‘ஆன்-லைன்’ செயலி மூலம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியதாகவும், உரிய காலத்தில் பணத்தை தரமுடியாததால் மனம் உடைந்து தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதனை மறுத்த அவரது பெற்றோர், அவர், கடந்த சில நாட்களாக வேலைபளு காரணமாக மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்ததாகவும் தெரிவித்தனர். எனினும் சாய் அரவிந்தின் சாவுக்கு உண்மையான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News