இந்தியா
கைது

காஷ்மீரில் சீன துப்பாக்கிகளுடன் 3 பேர் கைது

Published On 2022-01-29 09:05 GMT   |   Update On 2022-01-29 09:05 GMT
காஷ்மீரில் 2 சீன துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் பைசல் மன்சூர், அசார் யாகூப், நசீர் அகமது தர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2 சீன துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News