செய்திகள்
கைது

கம்பைநல்லூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2021-10-23 10:14 GMT   |   Update On 2021-10-23 10:14 GMT
கம்பைநல்லூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொரப்பூர்:

கம்பைநல்லூர் சந்தைப்பேட்டை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்ற காடையாம்பட்டியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News