செய்திகள்
மாயம்

சேலத்தில் பீகார் இளம்பெண் மாயம்

Published On 2021-01-10 13:02 GMT   |   Update On 2021-01-10 13:02 GMT
சேலத்தில் பீகார் இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
சேலம்:

சேலம் வடக்கு அழகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் திலீப்குமார். பீகாரை சேர்ந்த இவர் சேலத்தில் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீகாரில் இருந்து தனது மகள் பிரியாகுமாரியை (வயது 20) சேலத்துக்கு அழைத்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரியாகுமாரி பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பீகார் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News