செய்திகள்
கைது

தாராவியில் 2 போலி டாக்டர்கள் கைது

Published On 2020-10-22 08:52 GMT   |   Update On 2020-10-22 08:52 GMT
தாராவியில் 2 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.
மும்பை:

மும்பை தாராவி நாயக்நகர், புத்தா தெரு பகுதியில் போலி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இந்த புகாரின்பேரில் அதிகாரிகள் அங்கு கிளினிக் நடத்தி வந்த டாக்டரிடம் போலி வாடிக்கையாளர்களை அனுப்பி விசாரணை நடத்தினர். இதில் அவர் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் கிளினிக் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் தாராவி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு சிகிச்சை அளித்து வந்த ராஜாராம் பைராகி (வயது48) என்பவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவர் வைத்திருந்த சான்றிதழை சரிபார்த்த போது, அது போலி சான்றிதழ் என்பது தெரியவந்தது.

இதேபோல புத்தா தெருவில் கிளினிக் நடத்தி வந்த முஜூபர் ரகுமான் என்பவரையும் அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். இவரும் போலி டாக்டர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட 2 போலி டாக்டர்களையும் தாராவி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News