செய்திகள்
கோப்புபடம்.

கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு பாராட்டு

Published On 2021-07-13 08:25 GMT   |   Update On 2021-07-13 08:25 GMT
370 பேரை கோவை எம்.பி., நடராஜ் பாராட்டி நினைவு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார்.
திருப்பூர்:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு பணியில் பல்வேறு தன்னார்வ அமைப்பினர் கட்சியினர் ஈடுபட்டு வந்தனர். திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பல்வேறு சேவைகளை செய்தனர்.

இந்தநிலையில் இக்கட்டான காலகட்டத்தில் சேவைகளை செய்தவர்களை  கவுரவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது. 

370 பேரை கோவை எம்.பி., நடராஜ் பாராட்டி நினைவு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார். இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முத்து கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News