உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த ஆசிரியர் பலி
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பள்ளி ஆசிரியர் பலியானார்.
வல்லம்:
தஞ்சை அருகே உள்ள தமிழ்ப்பல்கலை கழக வளாகம் சிந்தாமணி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் தாயுமானவன் (வயது 36).
இவருடைய மனைவி பெயர் தேன்மொழி (26). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தாயுமானவன் தஞ்சை அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர்.
இந்நிலையில் தாயுமானவன், தேன்மொழியுடன் மோட்டார் சைக்கிளில் வலங்கைமானுக்கு சென்று விட்டு திருவையாறு-பிள்ளையார்பட்டி பைபாஸ் சாலையில் வந்தபோது.
8-ம் நம்பர் கரம்பை அருகே மோட்டார் சைக்கிள் டயர் சறுக்கியதில் நிலைதடுமாறி. இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தாயுமானவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேன்மொழி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.