ஆன்மிகம்
இயேசு

தன்னலம் துறந்து வாருங்கள் என இயேசு அழைக்கின்றார்

Published On 2021-10-16 06:51 GMT   |   Update On 2021-10-16 06:51 GMT
"தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார். என் பொருட்டு தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்" என்றார் இயேசு
இன்றைய நற்செய்தி வாசகம் இயேசு தமது பாடுகள், உயிர்த்தெழுதல் பற்றி கூறுவதும் அதேவேளை தன்னை பின்பற்ற விரும்பினால் தன்னலம் துறந்து தம் சிலுவையை சுமந்து கொண்டு தன் பின்னே வரட்டும் என தெரிவித்ததையும் நமக்கு கூறுகிறது.

உலகில் ஒவ்வொரு மனிதனும் சுயநலத்துடன் வாழ்ந்தால் சக மனிதர்கள் வாழ முடியாது போகும். அதனால் தான் தன்னை பின்பற்றுகிறவர்களை தன்னலம் துறந்து வாருங்கள் என இயேசு அழைக்கின்றார். மக்களை அன்பு செய்வதற்காகவே இயேசு சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார்.

அதேபோன்று அவரை பின்பற்றுகின்ற நாமும் அனுதினம் நாம் சுமக்கும் சிலுவை களோடு அவரை பின் தொடருமாறு அவர் அழைக்கின்றார்.

சத்திய வேதம் பிறரன்பு மற்றும் தன்னைப் போல பிறரை நேசிக்கும் உணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.

எமது குடும்ப வாழ்வில், பொது வாழ்வில் இன்னோரன்ன நாம் சந்திக்க நேரும் அனைத்து சவால்களிலும் இயேசு எப்போதும் எம்முடனே இருக்கின்றார் என்பதை விசுவாசிப்போம்.

எமது கஷ்டங்கள் சிலுவைகளை நாம் தனித்து சுமக்கவில்லை அவர் வாழ்க்கையில் எம்மைத் தாங்கி நம் முன் செல்கின்றார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் தவக்காலத்தில் பயணிப்போம்.

"தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார். என் பொருட்டு தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்" என்றார் இயேசு
Tags:    

Similar News