செய்திகள்
மின்சார நிறுத்தம்

சீர்காழி வட்டாரத்தில் மீண்டும் 3½ மணிநேரம் மின்வெட்டு- பொதுமக்கள் அவதி

Published On 2021-10-19 17:36 GMT   |   Update On 2021-10-19 17:36 GMT
சீர்காழி பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் இவ்வாறு 13 மணிநேரம் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டநிலையில் மீண்டும் இவ்வாறு மின்வெட்டு ஏற்படுவது தொடர்கதையாகிவிட்டதால் மக்கள் பெரும் அதிருப்தியடைந்தனர்.

சீர்காழி:

சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், கொள்ளிடம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென மின்வெட்டு ஏற்பட்டது.நேரம் செல்ல,செல்ல மின்சாரம் வரவில்லை. இரவு சுமார் 8.30மணி அளவில் மீண்டும் மின்சாரம் வந்தது. சுமார் மூன்றரை மணிநேரம் ஏற்பட்ட இந்த மின்தடையால் பொதுமக்கள், வியாபாரிகள்,மாணவ- மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

சீர்காழி பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் இவ்வாறு 13 மணிநேரம் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டநிலையில் மீண்டும் இவ்வாறு மின்வெட்டு ஏற்படுவது தொடர்கதையாகிவிட்டதால் மக்கள் பெரும் அதிருப்தியடைந்தனர்.

மின்பராமரிப்பு பணிகளின்போது பழுது ஏற்பட்டுள்ள மின்கம்பி, மின்சாதனபொருட்களை மின்சார வாரியம் முறையாக சீரமைத்திருந்தால் இதுபோன்ற மின்வெட்டு பிரச்சனைகள் ஏற்படாது என வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து மின்சார வாரியத்திடம் கேட்டபோது, கிராரங்கொண்டான் மின்நிலையத்திலிருந்து வைத்தீஸ்வரன்கோயில் துணை மின்நிலையத்திற்கு வரும் பிரதான மின்பாதையில் பழுது ஏற்பட்டதால் இந்த மின்வெட்டு ஏற்பட்டது என்றனர்.

Tags:    

Similar News