டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்படி சத்தியமங்கலம் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் பங்களாபுதூர் போலீசார் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் செல்லிபாளையம் என்ற பகுதியில் இருவர் கஞ்சா விற்பதாக தெரியவருகிறது.
அதனை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 31) பிடித்து விசாரித்ததில் மூர்த்தியும் இவரது மனைவி கனகா (வயது 28) இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
அதனையடுத்து மூர்த்தியிடம் இருந்து 250.கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து கணவருடன் சேர்ந்து கஞ்சா விற்று வந்ததாக சொல்லப்படும் கனகா தலைமறைவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.