ஆன்மிகம்
பிள்ளையார் சுழியின் தத்துவம்

பிள்ளையார் சுழியின் தத்துவம்

Published On 2019-07-11 08:27 GMT   |   Update On 2019-07-11 08:27 GMT
ஏதாவது எழுதும் முன்பாக நாம் ‘உ’ என பிள்ளையார் சுழி போட்ட பிறகே எழுதுகிறோம். இதற்கான தத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
ஏதாவது எழுதும் முன்பாக நாம் ‘உ’ என பிள்ளையார் சுழி போட்ட பிறகே எழுதுகிறோம். ‘ஓம்’ என்ற மந்திரத்திற்கு பிறகே ‘கணேசாய நமஹ’, ‘நாராயணாய நமஹ’, ‘சிவாய நம’ என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ‘ஓம்’ என்பதை, ‘அ, உ, ம்’ என்று பிரிக்க வேண்டும்.

அதாவது, ‘அ, உ, ம்’ என்ற எழுத்துக்களை இணைத்தால் ‘ஓம்’ என்று வரும். ‘அ’ என்பது படைப்பதையும், ‘உ’ என்பது காப்பதையும், ‘ம்’ என்பது அழிப்பதையும் குறிக்கும். ‘அ’ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது.

‘உ’ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக்கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் தொடங்கும் காரியங்கள் தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம்.

மேலும், ‘உ’ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மைப் பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால், நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காக ‘உ’ என எழுதுகிறோம்.

Tags:    

Similar News