ஆன்மிகம்
நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கோடை திருநாள் நிறைவு

Published On 2021-04-27 09:17 GMT   |   Update On 2021-04-27 09:17 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் கடந்த 17-ந்தேதி தொடங்கி 21-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது.

வெளிக்கோடை திருநாள் 22 -ந்தேதி தொடங்கியது. வெளிக்கோடை திருநாளின் நிறைவு நாளான நேற்று இரவு 7 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து உள்கோடை மண்டபத்திற்கு இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து இரவு 9 மணிக்கு வீணை வாத்தியத்துடன் புறப்பட்டு இரவு 10 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) கஜேந்திரமோட்ச புறப்பாடு நடைபெறுகிறது.
Tags:    

Similar News