ஆன்மிகம்
தீபத்திருவிழா 6-ம் நாள்: நால்வருடன் விநாயகர், சந்திரசேகரர் உலா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் 6-ம் நாள் விழாவையொட்டி நேற்று நால்வருடன் விநாயகர், சந்திரசேகரர் உலா நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் உலாவும் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவில் கோவிலில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 5-ம் பிரகாரத்தில் உலா வந்தனர்.
தொடர்ந்து 6-ம் நாள் விழா நேற்று நடைபெற்றது. வழக்கமாக 6-ம் நாள் விழாவின் போது காலையில் 63 நாயன்மார்கள் உலா நடைபெறும். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் 63 நாயன்மார்கள் விழா நடைபெறவில்லை. இருப்பினும் நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மேலும் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க 5-ம் பிரகாரத்தில் நால்வருடன் விநாயகர், சந்திரசேகரர் உலா நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணியளவில் பஞ்சமூர்த்திகள் உலா நடைபெற்றது.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் நாள் அன்று நடைபெறும் தேரோட்டமும் ஒன்று. இந்த ஆண்டும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதனால் 7-ம் நாள் விழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) ஆகம விதிகளின் படி கோவில் வளாகத்திற்கு வெள்ளி வாகனங்களில் சாமி உலா காலை சுமார் 6.30 மணியளவில் நடைபெற உள்ளது. இன்று காலை 9 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது. அதன்பின்னர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஏற்றப்படுகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து 6-ம் நாள் விழா நேற்று நடைபெற்றது. வழக்கமாக 6-ம் நாள் விழாவின் போது காலையில் 63 நாயன்மார்கள் உலா நடைபெறும். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் 63 நாயன்மார்கள் விழா நடைபெறவில்லை. இருப்பினும் நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மேலும் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க 5-ம் பிரகாரத்தில் நால்வருடன் விநாயகர், சந்திரசேகரர் உலா நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணியளவில் பஞ்சமூர்த்திகள் உலா நடைபெற்றது.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் நாள் அன்று நடைபெறும் தேரோட்டமும் ஒன்று. இந்த ஆண்டும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதனால் 7-ம் நாள் விழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) ஆகம விதிகளின் படி கோவில் வளாகத்திற்கு வெள்ளி வாகனங்களில் சாமி உலா காலை சுமார் 6.30 மணியளவில் நடைபெற உள்ளது. இன்று காலை 9 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது. அதன்பின்னர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஏற்றப்படுகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.