உள்ளூர் செய்திகள்
மீனவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
சேதுபாவாசத்திரம் அருகே மீனவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பேராவூரணி:
சேதுபாவாசத்திரம் அருகே சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி
மனோராவில் பாஜக சார்பில் பிரதம மந்திரியின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு களத்தூர் ஒன்றிய கவுன்சிலர் பெரியநாயகி தலைமை வகித்தார். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலாஜிசிவராஜ்,
மத்திய மீன்வள ஆராய்ச்சித்துறை விஞ்ஞானிகள் தமிழ்மணி, ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் கடற்பாசி வளர்ப்பதன் பயன் அதன் மூலம் வருமானத்தை பெருக்குவது பற்றி மீனவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதில் இளம் விஞ்ஞானி மோகன்ராஜ், மனோரா மீனவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.