ஆன்மிகம்
தூய அலங்கார உபகார மாதா

தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா 4-ந் தேதி தொடங்குகிறது

Published On 2020-12-04 08:55 GMT   |   Update On 2020-12-04 08:55 GMT
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா வருகிற 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 4-ந்தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கி 13-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

திருவிழாவின் முதல்நாளாக 4-ந்தேதி காலை 6.15 மணிக்கு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி, 5. 30 மணிக்கு திருக்கொடி பவனி, ஜெபமாலை நடக்கிறது. 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார்.

திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி, காலை 8 மணிக்கு திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி நடக்கிறது. 10 மற்றும் 11-ந்தேதிகளில் இரவு 9 மணிக்கு திருச்சப்பர பணி நடைபெறுகிறது.

விழாவில் 12-ந்தேதி இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத்தேர் பவனி நடக்கிறது. 13-தேதி அதிகாலை 4.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் தங்கத்தேர் திருப்பலி, 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி, 9 மணிக்கு மாதா சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி, பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

திருவிழாவில் பங்கு மக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வருமாறு பங்கு பேரவை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்தந்தை ஆன்டனி அல்காந்தர், இணை பங்கு தந்தையர்கள் லெனின் சுரேஷ், பங்கு பேரவை துணைத்தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், துணை செயலாளர் தினகரன், பொருளாளர் ஆன்டின் செல்வகுமார் மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News