செய்திகள்
வாலாஜாவில் கார் மோதி மூதாட்டி பலி- வாலிபர் கைது
வாலாஜாவில் சாலையில் நடந்து சென்ற போது கார் மோதிய விபத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வாலாஜா:
வாலாஜா அடுத்த வன்னியவேடு பகுதியை சேர்ந்தவர் அமிர்தம் (60). இவர் கடந்த 9-ந் தேதி வன்னியவேடு ஏரிக்கரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு அய்யப்ப பூஜையில் கலந்து கொள்ள நடந்து சென்றார்.
வாலாஜா அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது அங்கு இருந்த கார் ஒன்று பின்னோக்கி வந்து அமிர்தம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அமிர்தத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் கார்த்திகேயன் (20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா அடுத்த வன்னியவேடு பகுதியை சேர்ந்தவர் அமிர்தம் (60). இவர் கடந்த 9-ந் தேதி வன்னியவேடு ஏரிக்கரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு அய்யப்ப பூஜையில் கலந்து கொள்ள நடந்து சென்றார்.
வாலாஜா அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது அங்கு இருந்த கார் ஒன்று பின்னோக்கி வந்து அமிர்தம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அமிர்தத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் கார்த்திகேயன் (20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.