உள்ளூர் செய்திகள்
கொடுமுடி அருகே தொழிலாளி வீட்டில் தீ விபத்து
கொடுமுடி அருகே தொழிலாளி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் பொருட்கள் எரிந்து சேதமானது.
கொடுமுடி:
கொடுமுடி அருகே தொழிலாளி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் பொருட்கள் எரிந்து சேதமானது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே கொளாநல்லியை சேர்ந்தவர் ரமேஷ்.
இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் இரவு ரமேஷ் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தாருடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள கோவிலில் இருந்து புறப்படு வதற்காக தயாராகி கொண்டிருந்தனர்.
அப்போது ரமேஷ் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் சிறிது நேரத்தில் ரமேஷ் வீடுமுழுவதும் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இது குறித்து ரமேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், டி.வி., துணிகள், பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.
வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இது குறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மின்கசிவு காரணமாக விபத்து நடந்ததா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.