செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் திடீர் மழை - சாலைகளில் குளம் போல் தேங்கிய தண்ணீர்

Published On 2021-09-16 11:09 GMT   |   Update On 2021-09-16 11:09 GMT
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
திருப்பூர்:

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசானது முதல் பலத்த மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்து இருந்தது.

இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. சுமார் அரை மணி நேரம் வரை இடைவிடாமல் மழை பெய்தது.  

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. 

சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து வெளியேறியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். மழையின் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  
Tags:    

Similar News