செய்திகள்
ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் ஆய்வு செய்த காட்சி.

மேல்நெல்லி கிராமத்தில் உதவி கலெக்டர் ஆய்வு

Published On 2021-01-11 13:20 GMT   |   Update On 2021-01-11 13:20 GMT
மேல்நெல்லி கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்கள் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி மனு கொடுத்தனர். அதன் பேரில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கலவை:

கலவை தாலுகா மேல்நெல்லி கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்கள் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி மனு கொடுத்தனர். அதன் பேரில் நேற்று ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மந்தைவெளி புறம்போக்கு இடத்தை பார்வையிட்டார். மேலும் அகரம், பென்னகர், அத்தியனம் போன்ற இடங்களையும் பார்வையிட்டார்.

அப்போது கலவை தாசில்தார் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன், துணை தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி, கிராம அதிகாரி விக்னேஷ், கிராம உதவியாளர் திருமலை ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News