செய்திகள்

திண்டுக்கல் அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து 4 வாலிபர்கள் காயம்

Published On 2019-05-15 12:01 GMT   |   Update On 2019-05-15 12:01 GMT
திண்டுக்கல் அருகே சுற்றுலா வந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

வடமதுரை:

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர் தேனி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தனர். பல இடங்களை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூரை அடுத்த கீரனூர் பிரிவில் கார் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை கடந்து தாறு மாறாக ஓடியது. பின்னர் எதிர்திசையில் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

விபத்தில் கரை ஓட்டிவந்த கிருஷ்ணகிரி மாவட்டம் மாதம்பள்ளியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது27), காஞ்சிபுரத்தை சேர்ந்த மனோஜ் (27), தேனியை சேர்ந்த முத்துகாமு (21), கிருஷ்ணகிரியை சேர்ந்த பாலாஜி (20) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மற்ற 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Tags:    

Similar News