செய்திகள்
கொள்ளை

வடவள்ளியில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

Published On 2021-06-26 10:12 GMT   |   Update On 2021-06-26 10:12 GMT
கோவை வடவள்ளியில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை வடவள்ளியை கல்வீரம்பாளையம் எஸ்.கே.வி நகரைச் சேர்ந்தவர் ஜான். இவரது மனைவி சிந்தியா (வயது 45). பல் டாக்டர். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு சோமையம்பாளையத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றார்.

பின்னர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் தங்கநகை, செல்போன் மற்றும் ஐ பேடை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சிந்தியா வடவள்ளி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இதேபோன்று கோவை ஆவாரம்பாளையம் சிறுவாணி பிருந்தாவன் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி சுதா (53) இவர்களுக்கு காருண்யா நகர் சப்பாணிமடை பகுதியில் பண்ணை வீடு உள்ளது. அங்கு வாரத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் வந்து தங்கி செல்வார்கள். இந்த நிலையில் பண்ணை வீட்டில் வேலை செய்யும் பிரசாந்த் என்பவர் சுதாவுக்கு போன் செய்து வீட்டின் முதல் மாடி கதவு திறந்து கிடப்பதாக கூறினார்.

இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த கேமரா, செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுதா காருண்யா நகர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News