செய்திகள்
சேத்துப்பட்டில் நண்பரை மதுபாட்டிலால் குத்தியவர் கைது
சேத்துப்பட்டில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் நண்பரை மதுபாட்டிலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு பழம்பேட்டை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45). சேத்துப்பட்டு பழம்பேட்டை பங்களாமேடு தெருவை சேர்ந்தவர் சாதிக்பாஷா (48). இருவரும் நண்பர்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று இருவரும் மதுகுடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சாதிக்பாஷா மதுபாட்டிலால் ஏழுமலையை குத்தியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி வழக்குப்பதிவு செய்து சாதிக்பாஷாவை கைது செய்தார்.