செய்திகள்
மல்லிகார்ஜூன கார்கே

விவசாயிகள் பட்ட கஷ்டங்களுக்கு யார் பொறுப்பேற்பது? -மல்லிகார்ஜூன கார்கே கேள்வி

Published On 2021-11-19 06:29 GMT   |   Update On 2021-11-19 06:29 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிராக இத்தனை நாட்களாகப் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு வெற்றி கிடைத்திருப்பதாக கார்கே கூறினார்.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தொடங்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பை விவசாயிகள் வரவேற்று கொண்டாடிவருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர். அதேசமயம், மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், இது வேளாண் சட்டங்களுக்கு எதிராக இத்தனை நாட்களாகப் போராட்டம் நடத்திய விவசாயிகளின் வெற்றி என்றார்.

‘இந்த விஷயத்தில் மத்திய அரசே குற்றம்செய்திருப்பது போல் தெரிகிறது. ஆனால் விவசாயிகள் பட்ட கஷ்டங்களுக்கு யார் பொறுப்பேற்பது? இந்த விவகாரங்களை பாராளுமன்றத்தில் எழுப்புவோம்’ என்றும் கார்கே கூறினார்.
Tags:    

Similar News