செய்திகள்
கோப்புப்படம்

பேஸ்புக் மூலம் பழகி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்

Published On 2021-06-18 09:22 GMT   |   Update On 2021-06-18 09:22 GMT
பேஸ்புக் மூலம் பழகி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

திருப்பதி:

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கும், ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் தினேஷ் (வயது26). என்பவருக்கும் இடையே பேஸ்புக் மூலமாக அறிமுகம் ஏற்பட்டது.

இருவரும் கடந்த 9 மாதங்களாக பேஸ்புக் மூலமாக பேசி வந்தனர். காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி தினேஷ் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார்.

தொடர்ந்து இளம்பெண்ணை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது தினேஷ், பாலியல் பலாத்காரம் செய்தது பற்றி யாரிடமாவது கூறினால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி மிரட்டி வைத்துள்ளார்.

அந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை யாரிடமும் கூறாமால் இருந்து வந்தார். தினேஷ் இளம்பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தி வந்தார்.

தனக்கு நேர்ந்த கொடுமை, துன்புறுத்தலை தாங்க முடியாமல் வேதனை அடைந்த இளம்பெண் தனது உறவினர் ஒருவரிடம் விவரங்களை தெரிவித்து, தினேஷ் மீது மதனப்பள்ளி டவுன் போலீசில் புகார் செய்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி தினேசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக மதனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Tags:    

Similar News