விளையாட்டு
இரண்டாவது முறையாக அதிக பந்தில் அரை சதம் கடந்த விராட் கோலி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் புஜாரா, விராட் கோலி ஜோடி 3வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது.
கேப் டவுன்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் எடுத்தார். புஜாரா 43 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்ரிக்கா தரப்பில் ரபாடா 4, மார்கோ ஜேன்சன் 3, ஆலிவியர், நிகிடி, கேசவ் மகராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி இரண்டாவது முறையாக அதிக பந்தில் அரை சதம் கடந்துள்ளார். இது இவரது 28-வது அரை சதமாகும். நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி 158 பந்தில் அரை சதம் கடந்தார்.
விராட் கோலி ஏற்கனவே 172 பந்தில் அரை சதம் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...புரோ கபடி லீக் - பாட்னா, குஜராத் அணிகள் வெற்றி