செய்திகள்
கோப்புபடம்

சின்னசேலம் அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது

Published On 2021-04-04 13:22 GMT   |   Update On 2021-04-04 13:22 GMT
சின்னசேலம் அருகே சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
சின்னசேலம்:

விழுப்புரம் மாவட்ட உதவி மேலாளர் பாக்கியராஜ் தலைமையிலான டாஸ்மாக் பறக்கும் படையினர் சின்னசேலம் அருகே உள்ள தகரை, 
கல்லாநத்தம் ஆகிய கிராமங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தகரை மூணாங்கன்னி குட்டை பகுதியில் சாராயம் விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை, கல்லாநத்தம் ஆற்றுமேட்டில் சாராயம் விற்ற ஏழுமலை, அதேபோல கல்லாநத்தம் சுடுகாட்டு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாராயத்துடன் நின்றுகொண்டிருந்த வெங்கடேசன் ஆகிய 3 பேரையும் பிடித்து சின்னசேலம் போலீ்ஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார் தலா 20 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News