ஆன்மிகம்
பாண்டமங்கலம் அருகே பகவதியம்மன் கோவில் தீமிதி விழா
பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே உள்ள குச்சிபாளையம் பகவதியம்மன் மற்றும் கொங்கலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே உள்ள குச்சிபாளையம் பகவதியம்மன் மற்றும் கொங்கலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். குச்சிபாளையத்தில் உள்ள பகவதியம்மன் மற்றும் கொங்கலம்மன் கோவில் திருவிழா தொடங்கி நடைபெற்றது. திருவிழாவையொட்டி வடிசோறு நிகழ்ச்சி, மாவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தர்கள் ஒவ்வொருவரும் 3 முறை தீமிதித்து அம்மனை வழிபட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் குச்சிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை குச்சிபாளையம் பகவதி அம்மன் மற்றும் கொங்கலம்மன் கோவில் திருவிழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தர்கள் ஒவ்வொருவரும் 3 முறை தீமிதித்து அம்மனை வழிபட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் குச்சிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை குச்சிபாளையம் பகவதி அம்மன் மற்றும் கொங்கலம்மன் கோவில் திருவிழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.