செய்திகள்
கோப்பு படம்.

கருமத்தம்பட்டியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கில் பிணமாக மீட்பு

Published On 2021-02-27 09:46 GMT   |   Update On 2021-02-27 09:46 GMT
கருமத்தம்பட்டியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வகிறார்கள்.
கருமத்தம்பட்டி:

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 27). இவரும் அதே பகுதியை சேர்ந்த சித்ரா (24) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அன்பரசன் குடும்பத்துடன் கோவை கருமத்தம்பட்டியில் உள்ள இந்திரா நகரில் குடியேறினார். இங்கு தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் அன்பரசன் போனில் பல பெண்களுடன் பேசியதாக சித்ரா சந்தேகப்பட்டார்.

இது குறித்து கணவரிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று அக்கம் பக்கத்தினர் பஸ்சில் சுற்றுலா சென்றனர். அப்போது குழந்தைகளை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு அவர்கள் கேட்டனர். அதன்படி 2 பெண் பிள்ளைகளையும் அவர்களுடன் சித்ரா அனுப்பி வைத்தார்.

நேற்று மாலை அன்பரசன் வீட்டுக்கு திரும்பியபோது சித்ரா தூக்கில் பிணமாக தொங்கினார். வீடு திறந்த கிடந்த நிலையில் சித்ரா தூக்கில் பிணமாக தொங்கியதால் கருமத்தம் பட்டி போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே வரதட்சணை கேட்டு சித்ராவை அன்பரசன் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.
Tags:    

Similar News