ஆன்மிகம்
விநாயகரின் ஒவ்வொரு பாகமும் ஒரு சக்தியை உணர்த்தும்

விநாயகர் உருவம் சொல்லும் சேதி

Published On 2021-09-09 07:29 GMT   |   Update On 2021-09-09 08:47 GMT
பஞ்சபூதங்களின் மொத்த உருவம்தான் விநாயகப் பெருமான். அத்தகைய ஐம்பெரும் சக்திகளையும் உள்ளடக்கிய விநாயகர் பற்றிய விவரம் வருமாறு:-
பஞ்சபூதங்களின் மொத்த உருவம்தான் விநாயகப் பெருமான். அவர் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒரு பெரும் சக்தியை உணர்த்துகிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியன ஐம்பெரும் சக்திகள். இந்த பஞ்சபூதங்ணீகளை நம்முன்னோர்கள் வணங்குவதற்குக் காரணம் அவை மனிதர்களால் அடக்கமுடியாத மாபெரும் சக்திகள் ஆகும்.

அத்தகைய ஐம்பெரும் சக்திகளையும் உள்ளடக்கிய விநாயகர் பற்றிய விவரம் வருமாறு:-

நிலம் (பூமி) - விநாயகரின் மடித்து வைத்துள்ள ஒரு பாதம், பூமியைக் குறிப்பதாகும்.
நீர் - சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும்.
நெருப்பு - அவரது மார்பு, நெருப்பைக் குறிக்கும்
காற்று - இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம், காற்றைக் குறிக்கும்.
ஆகாயம் - இருபுருவங்களின் அரைவட்டம் நடுவில் வளைந்திருக்கும் கோடு ஆகாயத்தைக் குறிக்கும்.

மூஞ்சூறுஇறைவனின் திருவடியை சரணடைந்தால், அவன் அருகிலேயே இருக்கும் பாக்கியம் கிடைக்கும்.

சிறிய கண்

எதையும் கூர்மையாக கவனிக்க வேண்டும்.

பெரிய தலை

நிறைய சிந்திக்க வேண்டும். நல்லனவற்றையே சிந்தனை செய்ய வேண்டும்.

பெரிய காது

ஆன்றோர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை அதிகமாக கேட்க வேண்டும்.

வாய்

தும்பிக்கைக்கு அடியில் மறைந்திருக்கும் வாய், குறைவாக பேச வலியுறுத்துகிறது.

அங்குசம்

ஆசைகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

கோடரி

பாச பந்தங்களில் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும்.

தந்தம்

இது எழுத்தாணியோடு ஒப்பிடப்படுகிறது. விநாயகர் எழுதிய மகாபாரதம் போன்ற தர்ம நூல்களை எழுத வேண்டும்.

அபயகரம்

நல்வழியில் நடப்பதன் மூலம் இறைவனின் ஆசி கிடைக்கும்.

தும்பிக்கை

எடுத்த காரியத்தில் இலக்கை அடைய உறுதிகொள்ள வேண்டும்

மோதகம்- லட்டு

விநாயகரை வேண்டினால் இனிப்பான செய்திகள் வந்து சேரும்.

பெரிய வயிறு

பானை வயிறு, இந்த பிரபஞ்சத்தோடு ஒப்பிடப்படுகிறது. உலமே எனக்குள் அடக்கம் என்பதை சொல்கிறது.
Tags:    

Similar News