செய்திகள்
கைது

வேதாரண்யம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2021-07-31 11:04 GMT   |   Update On 2021-07-31 11:04 GMT
வேதாரண்யம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுப்பள்ளி கிராமம் நடுபாலத்தில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த சேனாதிபதி (வயது 27), சங்கர் (23) என்பதும் , அவர்கள் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா பதுக்கி விற்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சேனாதிபதி, சங்கர் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 1.1 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News