செய்திகள்
அந்தியூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
அந்தியூர் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் ஒரிச்சேரி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்ததை பார்த்தனர். அவரை பிடித்து விசாரித்தபோது ஒரிச்சேரி பகுதியை சேர்ந்த அழகுராஜா (வயது 50) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற கொத்தமங்கலம் அருகே உள்ள இந்திரா நகர் மேற்கு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் கைது செய்தார். அவரிடம் இருந்து 71 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.