செய்திகள்
தற்கொலை

சாத்தூர் அருகே வாலிபர் தற்கொலை

Published On 2021-11-30 09:57 GMT   |   Update On 2021-11-30 09:57 GMT
சாத்தூர் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:

சாத்தூர் அருகே நத்தத்துப்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 25). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் அவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த இருக்கன்குடி போலீசார் பால்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இ்ந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News