செய்திகள்
9-வது சுற்று முடிவு: எடப்பாடி பழனிசாமி 35,449 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக வேட்பாளர் சம்பத்குமாரை விட 35,449 வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலையில் உள்ளார்.
எடப்பாடி
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் போட்டியிட்டார். திமுக சார்பில் சம்பத்குமார், அமமுக சார்பில் பூக்கடை சேகர், மக்கள் நீதி மய்யம் சார்பில் தாசப்பராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீரத்னா ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி 9-வது சுற்று முடிவில் 35,449 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். எடப்பாடி பழனிசாமி 56,252 வாக்குகளும், சம்பத்குமார் 20,803 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் போட்டியிட்டார். திமுக சார்பில் சம்பத்குமார், அமமுக சார்பில் பூக்கடை சேகர், மக்கள் நீதி மய்யம் சார்பில் தாசப்பராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீரத்னா ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி 9-வது சுற்று முடிவில் 35,449 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். எடப்பாடி பழனிசாமி 56,252 வாக்குகளும், சம்பத்குமார் 20,803 வாக்குகளும் பெற்றுள்ளனர்.